Skip to main content

Posts

முதுகுவலி வந்தபின் நாம் செய்யும் தவறுகள்!!

  "முதுகெலும்பில்லா மனிதன் புழுவிற்கு சமமாகிறான்" பொதுவாக முதுகுவலி(Back Pain) வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த முதுகுவலி (Back Pain) தொடர்ந்து நீண்ட நாட்கள் இருப்பதற்கு முழு காரணமும் நாம் மட்டுமே அது எவ்வாறெனில் ஒன்று : முதுகுவலி வந்துவிட்டால் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பது இரண்டு : முதுகுவலி வந்தபின்புதான் அதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூன்று : வலி வந்தவுடன் பல மாத்திரைகளை எடுத்து தற்காலிக நிவாரணம் காண்பது இல்லையென்றால் தவறான சிகிச்சைகள் மூலம் தற்காலிகமாக வலிகளிலிருந்து தப்பித்து கொள்வது என ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு நீண்ட காலமாக அந்த வலியை நம்முடனே வைத்துக்கொள்கிறோம் பிறகு நாம் அதற்கு பழகிக் கொள்கிறோம்!! இது முதுகு வலிக்கு மட்டும் பொருந்தாது உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நாம் இதே தவறுதான் செய்கிறோம். கடினமான உடல் உழைப்பு இருந்த காலத்தில் கூட இந்த முதுகுவலி என்ற பிரச்சனை அதிகமாக இருந்தது இல்லை. ஆனால் இன்றைய காலத்தில் இந்த முதுகு வலி பிரச்சனை என்பது அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது!! அதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கிறது!! ஒன்றை மட்டும் பு...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க உதவும் ஆடாதொடை

  ஆடா தொடை எங்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு பச்சிலையாகும். இது செடியினத்தை சேர்ந்தது. தன்னிச்சையாக வளரும். மாவிலைகள் போன்று இதன் இலைகள் இருக்கும். இதன் பூக்கள் வெண்மையானது. ஆடாதொடையின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயனுடையது. காசநோயினாலும், கபத்தினாலும் அவதிப்படுவோருக்கு ஆடா தொடை இலை பெரிதும் உதவுகிறது. இதன் இலையை சுத்தம் செய்த, பொடியாக நறுக்கி, கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தேன் சேர்த்து குடித்து வந்தால் கசரோகம் படிப்படியாக குறையும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது ஒரு அருமருந்து.  நுரையீரலில் தேங்கி நிற்கும் கபத்தை சிறிது சிறிதாக வெளியேற்றும். மூச்சுத் திணறல், இரத்த வாந்தி, இருமல் போன்ற நோய்களால் அவதியுறுவோருக்கு, ஆடாதொடை இலையை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து தேனில் கலந்து கொடுத்துவந்தால் மூச்சுத்திணறல் உடனே நிற்கும், இருமல் குணமாகும் சீத பேதியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடா தொடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க குணமாகும்.  ஆஸ்துமா என்னும் சுவாசகாச நோயுள்ளவர்கள் அதிக குளிர் ஏற்பட்டாலும், மழை, பள்...

ஆஸ்துமா என்னும் கொடிய நோயை விரட்டியடிக்கலாமா!!

  ஆஸ்துமா(Asthma) என்பது ஒரு கொடிய நோயா? அதைக் குணப்படுத்த முடியாதா? என்னும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.மனிதனுக்கு முதல் முக்கிய உணவே காற்றுதான். அதை பெறுவதில் தடைகளை ஏற்படுத்தும் இந்த ஆஸ்துமா நோய். ஆம் ஆஸ்துமா நோயாளிகளால் இயல்பாக சுவாசிக்க முடியாது.   பொதுவாக சுவாசக் குழாயில் ஏற்படும் அடைப்பு, அல்லது வீக்கம் இதுவே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் இயல்பாக சுவாசிக்க முடியாது. ஓட முடியாது. தூசி உள்ள இடங்களிலும் இருக்க முடியாது. குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட முடியாது.   இதற்கு தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. இன்றளவும் பலர் இந்த பிரச்சனைக்கு இன்ஹேலரையே பயன்படுத்துகின்றனர். இது சரியான தேர்வா என்றால் சற்று  சிந்திக்க வேண்டிய விஷயமாகத்தான் உள்ளது .ஏனென்றால் இது தற்காலிக தீர்வை மட்டும்தான் கொடுக்குமே தவிர, நிரந்தர தீர்வை கொடுக்காது  என்கின்றனர் பலர் . இதை ஒருமுறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டியதாயிருக்கும்.   அப்படியென்றால் இதற்கு தீர்வுதான் என்ன என்...

அரைக்கீரையும் அதன் அற்புத நன்மைகளும்!!

  பித்தசுரம் போக்கும் குளிர்க்காய்ச்சலை குணமாக்கும் உடல் வலிகளை நீக்கும் ஜலதோஷம், சன்னி, வாதம், சளி, இருமல் ஆகியவற்றை போக்கவல்லது உடலுக்கு வலுவூட்டும் சூதக சன்னி கோளாறுகள் நீக்கும் ஜீவசக்தியை பெருக்கும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மண்டை பீநிசத்தை நீக்கும்     இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடி வகையாகும்.இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும், அடிப்பக்கம் சிவப்பும், நீலமும் கலந்த தங்க நிறமாகவும் காட்சியளிக்கும்.கிளைவிட்டு வளரக்கூடியது.இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியது. நாள்தோறும் உண்ணுவதற்கு ஏற்றது. எந்தவித நோயாளிக்கு கெடுதல் விளைவிக்காத முதல் சத்துணவாக விளங்கக்கூடியது.இக்கீரையில் இரும்பு சத்து உள்ளது.    இக்கீரையை உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து உண்ண காய்ச்சல், நடுக்கம், சன்னி, காயாரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் துவரம்பருப்பை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளி போட்டு தாளித்து அவியலாக செய்து சாப்பிட சளி இருமல், கப இருமல் யாவும் நீங்கும். அத்துடன் வெங்காயமும், பெருங்காயமும் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட ஜலதோசம், சன்னி, பாதசுரம், குளி...

63 வகை சத்துக்கள் கொண்ட அகத்திக்கீரை!!

                          அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.             அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.                நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறத...

அறுசுவை உணவின் நன்மைகள்

  இனிப்பு : உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு : ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு :   ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.   கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் : உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. கசப்பு : உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும். ச...