ஆடா தொடை
எங்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு பச்சிலையாகும். இது செடியினத்தை சேர்ந்தது. தன்னிச்சையாக
வளரும். மாவிலைகள் போன்று இதன் இலைகள் இருக்கும். இதன் பூக்கள் வெண்மையானது.
ஆடாதொடையின்
இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயனுடையது.
காசநோயினாலும்,
கபத்தினாலும் அவதிப்படுவோருக்கு ஆடா தொடை இலை பெரிதும் உதவுகிறது. இதன் இலையை சுத்தம்
செய்த, பொடியாக நறுக்கி, கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி
காலை, மாலை தேன் சேர்த்து குடித்து வந்தால் கசரோகம் படிப்படியாக குறையும்.
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது ஒரு அருமருந்து. நுரையீரலில்
தேங்கி நிற்கும் கபத்தை சிறிது சிறிதாக வெளியேற்றும். மூச்சுத் திணறல், இரத்த வாந்தி,
இருமல் போன்ற நோய்களால் அவதியுறுவோருக்கு, ஆடாதொடை இலையை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து
தேனில் கலந்து கொடுத்துவந்தால் மூச்சுத்திணறல் உடனே நிற்கும், இருமல் குணமாகும்
சீத பேதியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடா தொடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க குணமாகும்.
ஆஸ்துமா என்னும் சுவாசகாச நோயுள்ளவர்கள் அதிக குளிர் ஏற்பட்டாலும், மழை, பள்ளிக்கலங்களிலும் இளைப்பு ஏற்படும், நுரையீரலில் கபம் கட்டிக்கொள்வதால் மூச்சு விடமுடியாமல் கஷ்டப்படுவர். விலா பகுதிகளில் வலி ஏற்படும்.இந்நோயுள்ளவர்கள் ஆடாதொடை இலையை சேகரித்து உலர்த்தி, தூளாக வைத்துக்கொள்வது நல்லது. இளைப்பு ஏற்படும் பொழுது இந்த இலைதுகள்களை சுங்கானில் வைத்து புகைபிடிக்கலாம். இப்புகை உள்ளே போனதும் கபத்தை உடைத்து வெளியேற்றிவிடும். நுரையீரல் அடைப்பு நீங்கி விடும். இது ஒரு அனுபவ வைத்தியமாக கருதப்படுகிறது .
நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் உங்கள் டயாவின் சித்த மருத்துவமனையில் சித்த மருந்துகள் வழங்கப்படுகிறது
Comments
Post a Comment