Skip to main content

Posts

Showing posts with the label food

63 வகை சத்துக்கள் கொண்ட அகத்திக்கீரை!!

                          அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.             அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.                நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறத...

அறுசுவை உணவின் நன்மைகள்

  இனிப்பு : உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு : ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு :   ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.   கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் : உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. கசப்பு : உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும். ச...