Skip to main content

Posts

Showing posts with the label Best Siddha Treatment

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....

அரைக்கீரையும் அதன் அற்புத நன்மைகளும்!!

  பித்தசுரம் போக்கும் குளிர்க்காய்ச்சலை குணமாக்கும் உடல் வலிகளை நீக்கும் ஜலதோஷம், சன்னி, வாதம், சளி, இருமல் ஆகியவற்றை போக்கவல்லது உடலுக்கு வலுவூட்டும் சூதக சன்னி கோளாறுகள் நீக்கும் ஜீவசக்தியை பெருக்கும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மண்டை பீநிசத்தை நீக்கும்     இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடி வகையாகும்.இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும், அடிப்பக்கம் சிவப்பும், நீலமும் கலந்த தங்க நிறமாகவும் காட்சியளிக்கும்.கிளைவிட்டு வளரக்கூடியது.இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியது. நாள்தோறும் உண்ணுவதற்கு ஏற்றது. எந்தவித நோயாளிக்கு கெடுதல் விளைவிக்காத முதல் சத்துணவாக விளங்கக்கூடியது.இக்கீரையில் இரும்பு சத்து உள்ளது.    இக்கீரையை உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து உண்ண காய்ச்சல், நடுக்கம், சன்னி, காயாரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் துவரம்பருப்பை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளி போட்டு தாளித்து அவியலாக செய்து சாப்பிட சளி இருமல், கப இருமல் யாவும் நீங்கும். அத்துடன் வெங்காயமும், பெருங்காயமும் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட ஜலதோசம், சன்னி, பாதசுரம், குளி...

63 வகை சத்துக்கள் கொண்ட அகத்திக்கீரை!!

                          அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.             அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.                நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறத...

Best Siddha Hospital in Tirunelveli | Young Man Report | Diawin Siddha Hospital

அப்துல்லா என்னும் 26 வயது இளைஞன் ஒரு விபத்தில் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 7 வருடங்களுக்கு பிறகு எங்கள் மருத்துவரின் உதவியாலும் தன் விடாமுயற்சியாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். அவர் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோ நமக்கு ஒரு உதாரணம். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!! உங்கள் நலனே!! எங்கள் நோக்கம்!! Diawin Siddha Hospital | டயாவின் சித்த மருத்துவமனை : For Consultation / Appointment : Dr. Melwin B.S.M.S.,D.V.M.S 24*7 Support : +91 94898 32921 Specialized in Siddha & Varma Treatments : Panchakarma TreatmentsKidney Failure / Kidney Stone Stroke TreatmentsSpine Treatments / knee Pain / Neck Pain / Back Pain / Joint Pain Liver Disorder / jaundice / cirrhosis Piles / Fistula / Fissure / Pilonidal Sinus Skin Treatments / PsoriasisENT Problems / Ear Problems / Sinus Obesity / Weight Loss TreatmentHair fall TreatmentsEye Problems Thyroid Problem Diabetes Asthma / Lung InfectionConstipationGall Bladder StoneFemale Infertility / PCOD Ma...

ஆர்த்தரைட்டிஸ் என்றால் என்ன?

  இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை: ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம். ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி. சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம். கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல். செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது. மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ் நோய்க்கான காரணங்கள்: மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல). மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக). தேய்ந்து போதல் (வயது காரணமாக). படிகங்கள் உருவாதல் (கவுட் போல). உடல் சோர்ந்து போதல். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது). ந...