Skip to main content

Posts

கல்லீரல் செயல்பாடு மற்றும் அதற்கான சித்த மருத்துவமும்!!

  சித்த மருத்துவத்தில் கல்லீரல் "ஈரல்" என்றும், அதன் முக்கியச் செயல்பாடுகள் "பித்தத்தின் இருப்பிடம்" என்றும் அழைக்கப்படுகின்றன. மனித உடலின் வாதம், பித்தம், கபம் ஆகிய முத்த hisதோஷங்களில், பித்த தோஷத்தை சீராகப் பராமரிப்பதில் கல்லீரலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. 1. சித்த மருத்துவத்தில் கல்லீரலின் பங்கு சித்த மருத்துவத் தத்துவப்படி, கல்லீரல் உடலின் செரிமானம், குருதி சுத்திகரிப்பு மற்றும் வெப்பநிலையை சீராக வைப்பதில் முதன்மையாகச் செயல்படுகிறது. இரஞ்சக பித்தம் (Ranjaka Pitham): உணவில் உள்ள சத்துக்களை ரத்தமாக (செவ்வணுக்களாக) மாற்றுவதற்கு கல்லீரலில் உள்ள இரஞ்சக பித்தமே காரணம். நச்சு நீக்கம்: உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது. செரிமானக் காரணி: பித்தநீரைச் (Bile) சுரந்து கொழுப்புச் சத்துக்களைச் செரிக்க உதவுகிறது. 2. கல்லீரல் சார்ந்த நோய்கள் (Siddha Perspective) பித்த தோஷம் அதிகரிக்கும் போது கல்லீரல் பாதிப்படைந்து பின்வரும் நோய்கள் ஏற்படுவதாக சித்த மருத்துவம் கூறுகிறது: நோய் சித்த மருத்துவப் பெயர் அறிகுறிகள் மஞ்சள் காமாலை...
Recent posts

கடுக்காய் பற்றி அறிந்து கொள்வோமா!!

  கடுக்காய் (Haritaki) பாரம்பரிய மருத்துவத்தில் "தாய்க்கு நிகரானது" என்று போற்றப்படும் ஒரு அற்புதமான மூலிகையாகும். "உடலில் உள்ள கழிவுகளை நீக்கினால், மனிதனுக்கு நோயே இல்லை" என்ற தத்துவத்தின் அடிப்படையில் கடுக்காய் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் முக்கிய மருத்துவப் பயன்கள் இதோ: 1. செரிமானம் மற்றும் வயிற்று ஆரோக்கியம் மலச்சிக்கல் குணமாக: கடுக்காய் பொடியை இரவு படுக்கும் போது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், குடல் சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் நீங்கும். செரிமானம் சீராக: இது வயிற்றுப் புண் (Ulcer), அமிலத்தன்மை (Acidity) மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, பசியைத் தூண்டுகிறது. 2. உடல் கழிவு நீக்கம் (Detoxification) இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை நீக்கி, இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. குடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. 3. நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் இளமை பாதுகாப்பு கடுக்காய் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி (Antioxidant) ஆகும். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. செல்களின் முதுமை...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

முதுகுவலி வந்தபின் நாம் செய்யும் தவறுகள்!!

  "முதுகெலும்பில்லா மனிதன் புழுவிற்கு சமமாகிறான்" பொதுவாக முதுகுவலி(Back Pain) வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த முதுகுவலி (Back Pain) தொடர்ந்து நீண்ட நாட்கள் இருப்பதற்கு முழு காரணமும் நாம் மட்டுமே அது எவ்வாறெனில் ஒன்று : முதுகுவலி வந்துவிட்டால் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பது இரண்டு : முதுகுவலி வந்தபின்புதான் அதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூன்று : வலி வந்தவுடன் பல மாத்திரைகளை எடுத்து தற்காலிக நிவாரணம் காண்பது இல்லையென்றால் தவறான சிகிச்சைகள் மூலம் தற்காலிகமாக வலிகளிலிருந்து தப்பித்து கொள்வது என ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு நீண்ட காலமாக அந்த வலியை நம்முடனே வைத்துக்கொள்கிறோம் பிறகு நாம் அதற்கு பழகிக் கொள்கிறோம்!! இது முதுகு வலிக்கு மட்டும் பொருந்தாது உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நாம் இதே தவறுதான் செய்கிறோம். கடினமான உடல் உழைப்பு இருந்த காலத்தில் கூட இந்த முதுகுவலி என்ற பிரச்சனை அதிகமாக இருந்தது இல்லை. ஆனால் இன்றைய காலத்தில் இந்த முதுகு வலி பிரச்சனை என்பது அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது!! அதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கிறது!! ஒன்றை மட்டும் பு...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க உதவும் ஆடாதொடை

  ஆடா தொடை எங்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு பச்சிலையாகும். இது செடியினத்தை சேர்ந்தது. தன்னிச்சையாக வளரும். மாவிலைகள் போன்று இதன் இலைகள் இருக்கும். இதன் பூக்கள் வெண்மையானது. ஆடாதொடையின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயனுடையது. காசநோயினாலும், கபத்தினாலும் அவதிப்படுவோருக்கு ஆடா தொடை இலை பெரிதும் உதவுகிறது. இதன் இலையை சுத்தம் செய்த, பொடியாக நறுக்கி, கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தேன் சேர்த்து குடித்து வந்தால் கசரோகம் படிப்படியாக குறையும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது ஒரு அருமருந்து.  நுரையீரலில் தேங்கி நிற்கும் கபத்தை சிறிது சிறிதாக வெளியேற்றும். மூச்சுத் திணறல், இரத்த வாந்தி, இருமல் போன்ற நோய்களால் அவதியுறுவோருக்கு, ஆடாதொடை இலையை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து தேனில் கலந்து கொடுத்துவந்தால் மூச்சுத்திணறல் உடனே நிற்கும், இருமல் குணமாகும் சீத பேதியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடா தொடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க குணமாகும்.  ஆஸ்துமா என்னும் சுவாசகாச நோயுள்ளவர்கள் அதிக குளிர் ஏற்பட்டாலும், மழை, பள்...