அகத்தி இலை,
பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும்
மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும்,
மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து
கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.
அகத்தி இலை
சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும்
தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால்
ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து
விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.
நாம் உண்ணும்
உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால்
ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தொடர்ந்து அகத்தி
கீரையை எடுத்து வந்தால் நன்கு பால் சுரக்கும்.தலைமுடி நன்கு செழித்து வளரவும் கண் குளிர்ச்சியடையவும்
பயன்படுகிறது.
அகத்தி பட்டை
குடிநீர் பெரியம்மை நோயின் ஆரம்ப காலகட்டத்தில் பயன் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன்
வேர்ப்பட்டையை குறிப்புகளின்படி குடிநீர் செய்து பருகினால் உடல் எரிவு, கை எரிவு, ஆண்குறியின்
உள்ளெரிவு, மேகம்,தாகம் அனைத்தும் நீங்குமாம்.
நாம் உண்ணும் உணவில் வாரம் ஒருமுறை இக்கீரையை சேர்த்து
சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள், வெயிலில் சுற்றி அலைபவர்கள், காபி, டீ
குடித்து பித்தத்தினால் அவதிப்படுபவர்கள் வாரம்
ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மற்றவர்கள் மாதம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவும்
மருத்துவ குணம் கொண்ட இக்கீரையை உண்டுவந்தால் அதுவே நமக்கு தீங்கு விளைவிக்கும் உணவாக
மாறிவிடும். இது பத்தியத்தை முறிக்கவல்லது. எனவே மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்திலும்,
பத்தியம் இருக்கும் காலத்திலும் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது
அனைத்து வகையான உடல் உபாதைகளுக்கும் தேவையான சித்த மருந்துகள் பற்றிய தகவல்கள் பெற்றிட இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
டயாவின் பல்நோக்கு சித்த மருத்துவமனை
சித்த மருத்துவர்
Dr.I.MELWIN B.S.M.S., D.V.M.S
CONTACT : 9489832921
Comments
Post a Comment