ஆஸ்துமா(Asthma) என்பது ஒரு கொடிய நோயா? அதைக் குணப்படுத்த முடியாதா? என்னும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.மனிதனுக்கு முதல் முக்கிய உணவே காற்றுதான். அதை பெறுவதில் தடைகளை ஏற்படுத்தும் இந்த ஆஸ்துமா நோய். ஆம் ஆஸ்துமா நோயாளிகளால் இயல்பாக சுவாசிக்க முடியாது. பொதுவாக சுவாசக் குழாயில் ஏற்படும் அடைப்பு, அல்லது வீக்கம் இதுவே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் இயல்பாக சுவாசிக்க முடியாது. ஓட முடியாது. தூசி உள்ள இடங்களிலும் இருக்க முடியாது. குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட முடியாது. இதற்கு தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. இன்றளவும் பலர் இந்த பிரச்சனைக்கு இன்ஹேலரையே பயன்படுத்துகின்றனர். இது சரியான தேர்வா என்றால் சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாகத்தான் உள்ளது .ஏனென்றால் இது தற்காலிக தீர்வை மட்டும்தான் கொடுக்குமே தவிர, நிரந்தர தீர்வை கொடுக்காது என்கின்றனர் பலர் . இதை ஒருமுறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டியதாயிருக்கும். அப்படியென்றால் இதற்கு தீர்வுதான் என்ன என்...