Skip to main content

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தர்ப்பை புல்!!

 


களைத் தாவரமாக கருதப்படும் தர்ப்பை புல்லில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது  இன்றும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை  .

 இந்த தர்ப்பை புல் குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் பழங்காலங்களில் கூரைகள் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது லேசான துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடனும் இருப்பதால் சீனா போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் ஜெல்லி, வினிகர், சாஸ், தேநீர், ஒயின், பற்பசை போன்ற அன்றாடம் பயன்டுத்தப்படும் பொருட்களில் இதை சேர்த்து பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தர்ப்பை தாவரத்தில் சபோனின்கள், கிளைக்கோசைடுகள், கெளமாரின்கள், ஃபிளேவனாய்டுகள், மற்றும் பீனால்கள் போன்ற 72 விதமான வேதிப்பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

தாவரவியல் பெயர்  : Imperata Cylindrica

ஆங்கிலப் பெயர் : Blady Grass

மருத்துவ குணங்கள்:

  •          நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது.
  •          புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
  •          நுரையீரல், இரைப்பை மற்றும் சிறுநீர்ப்பை போன்ற உள்ளுறுப்புகளை நோய்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது
  •          சிறந்த ஆன்டிஆக்சிடெண்டாகச் செயல்படுகிறது
  •          உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
  •          உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  •          சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
  •          சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது .

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட தர்ப்பை புல்லை நன்கு காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம். நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீருக்கு பதில் பயன்படுத்தலாம் .    

Published by :டயாவின் சித்த மருத்துவமனை 


Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....