சிறுநீரில் இரத்தம் வருவது நல்லதல்ல, அவ்வாறு வந்தால் அதை அலட்சியப்படுத்த
வேண்டாம். அதிகமாக வலிநிவாரணி மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது,
கடுமையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதனால் அடிபடுவது,
சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுவது, கல்லடைப்பு போன்ற பல
காரணங்களால் இரத்தம் வரலாம். ஒவ்வொரு காரணத்திற்கும் அறிகுறிகள் உண்டு.
1. சிறுநீர் கழிக்கும் போது மட்டும் இரத்தம் கசிவது : சிறுநீர் புறவழி அழற்சி அடைந்திருப்பதை குறிக்கும்.
2. சிறுநீர் கழிக்கும் போது கடைசி சில துளிகள் மட்டும் இரத்தமாக இருப்பின் : சிறுநீர்ப்பை வயிற்றுப்புறம் புண்ணாகியிருப்பதைக் குறிக்கும்.
3. தாங்கமுடியாத இடுப்புவலியுடன் சிறுநீர் கழிப்பதாயின் : சிறுநீரகத்தில் கல்லடைப்பு காரணமாகும்
4. சிறுநீரகத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை இரத்தம் உறைந்து சிறுசிறு கட்டிகள் போன்று வெளியேறுதல் : சிறுநீரகம் (அ) சிறுநீர்ப் பையில் கட்டிகள் இருப்பதை உணர்த்தும்.
5. ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம், கடுமையான உடற்பயிற்சிப் போட்டிகளில் ஈடுபடும் போது ஏற்படும் அதிர்வு, சிறுநீரக சிராய்ப்பினால் சிறுநீரில் இரத்தம் கசிய வாய்ப்புண்டு.
6. சிலவகை வலி நிவாரணி மருந்துகளை சாப்பிடுவதாலும், போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படும் போதும், இரவு நேரக் கண்விழிப்பு, அதிக அளவு மது அருந்துதல், ஓயாத புகைப்பழக்கம் காரணமாகவும் சிறுநீரில் இரத்தம் கசிவதுண்டு.
எனவே சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வருவதாக உணர்ந்தால் பதட்டமடையாமல் , சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்கான சரியான காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.
சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு டயாவின் சித்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிகிச்சை பற்றிய தகவல்களைப் பெற 9489832921 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment